திட்ட நிலவரம் மற்றும் ஆலோசனை

எங்கள் முதல் சமூக ஆலோசனையை தொடர்ந்து, சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக மையத்தின் கட்டுமானச் செலவு மதிப்பீடு (தோராயமாக $40மில்லியன்), 2019 கட்டுமானச் செலவுகளின் அடிப்படையில், அமைந்தது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், கட்டுமானச் செலவில் 70% ஈடுசெய்ய ICIP நிதியுதவிக்கு விண்ணப்பித்தோம். 2022 இல், ஒரு திட்ட மேலாண்மை அலுவலகத்தையும் ஒரு முதன்மை ஆலோசகரையும் (கட்டிடக் கலைஞர்) பணியமர்த்தினோம். தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடையே த.ச.மை நடத்திய பரந்த ஆலோசனைகளின் அடிப்படையில் ஆலோசகர்கள் கட்டிடத்தின் வடிவமைப்பை மேம்படுத்தினர். திட்டக் குழு புதுப்பிக்கப்பட்ட கட்டுமானச் செலவு மதிப்பீட்டை நிறைவு செய்தது. இது எங்களின் 2019 விண்ணப்ப மதிப்பீட்டை விட கணிசமானவளவு அதிகமாக இருக்கிறது. 2019 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து, குறிப்பிடத்தக்க பொருள் மற்றும் உழைப்புக்கான செலவு அதிகரிப்புகள் உள்ளன, இது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முதல் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை தோராயமாக 37% அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்புகள் தற்போதைய கட்டுமான செலவுகளின் மதிப்பீடுகளில் பிரதிபலிக்கின்றன. இதை போன்ற எல்லா கட்டுமானத் திட்டங்களும் அதே சிரமங்களை எதிர்கொள்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட முதல் வரவுசெலவுத்திட்டத்தை பராமரிப்பதற்கான வழிவகைகள் எதுவும் திட்டக் குழுவிற்கு இல்லை. மற்றும் வரவுசெலவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டத்தின் வடிவமைப்பு நோக்கத்தை மாற்றுவதற்கு இயக்குநர் குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற நாம் முழுமையான அர்ப்பணத்துடன் உள்ளோம். கட்டுமானச் செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ICIP திட்டங்களுக்கு நிதி வரம்பை அதிகரிப்பது குறித்து மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு நாங்கள் விசாரித்து எழுதியிருக்கிறோம். இந்த அதிகரிப்பைத் தணிக்க உதவக்கூடிய சாத்தியமான வேறு அரசாங்க நிதியுதவி வளங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த அதிகரித்த கட்டுமான வரவுசெலவுத் திட்டத்துடன், த.ச.மை. திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க உங்கள் ஆலோசனையை நாடுகிறோம்.

இந்த இணையமூல ஆலோசனையை நிரப்ப ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருடனும் பரவலாகப் பகிரவும்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி